🔗

பைஹகீ-குப்ரா: 18609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَوْنَا إِلَيْهِ الْعُرْيَ وَالْفَقْرَ وَقِلَّةَ الشَّيْءِ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَبْشِرُوا فَوَاللهِ لَأَنَا بِكَثْرَةِ الشَّيْءِ أَخْوَفُنِي عَلَيْكُمْ مِنْ قِلَّتِهِ , وَاللهِ لَا يَزَالُ هَذَا الْأَمْرُ فِيكُمْ حَتَّى يَفْتَحَ اللهُ أَرْضَ فَارِسَ وَأَرْضَ الرُّومِ وَأَرْضَ حِمْيَرَ , وَحَتَّى تَكُونُوا أَجْنَادًا ثَلَاثَةً , جُنْدًا بِالشَّامِ , وَجُنْدًا بِالْعِرَاقِ , وَجُنْدًا بِالْيَمَنِ , وَحَتَّى يُعْطَى الرَّجُلُ الْمِائَةَ فَيَسْخَطَهَا “.

قَالَ ابْنُ حَوَالَةَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ وَمَنْ يَسْتَطِيعُ الشَّامَ وَبِهِ الرُّومُ ذَوَاتُ الْقُرُونِ؟ قَالَ: ” وَاللهِ لَيَفْتَحَنَّهَا اللهُ عَلَيْكُمْ , وَلَيَسْتَخْلِفَنَّكُمْ فِيهَا , حَتَّى يَظَلَّ الْعِصَابَةُ الْبِيضُ مِنْهُمْ قُمُصُهُمُ، الْمُلْحَمَةُ أَقْفَاؤُهُمْ، قِيَامًا عَلَى الرُّوَيْجِلِ الْأَسْوَدِ مِنْكُمُ الْمَحْلُوقِ مَا أَمَرَهُمْ مِنْ شَيْءٍ فَعَلُوهُ , وَإِنَّ بِهَا رِجَالًا لَأَنْتُمْ أَحْقَرُ فِي أَعْيُنِهِمْ مِنَ الْقِرْدَانِ فِي أَعْجَازِ الْإِبِلِ “.

قَالَ ابْنُ حَوَالَةَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ اخْتَرْ لِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ. قَالَ: ” إِنِّي أَخْتَارُ لَكَ الشَّامَ فَإِنَّهُ صَفْوَةُ اللهِ مِنْ بِلَادِهِ , وَإِلَيْهِ تُجْتَبَى صَفْوَتُهُ مِنْ عِبَادِهِ , يَا أَهْلَ الْيَمَنِ عَلَيْكُمْ بِالشَّامِ , فَإِنَّ مِنْ صَفْوَةِ اللهِ مِنْ أَرْضِهِ الشَّامَ , أَلَا فَمَنْ أَبَى فَلْيَسْتَبْقِ فِي غُدُرِ الْيَمَنِ , فَإِنَّ اللهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ “.

قَالَ أَبُو عَلْقَمَةَ: فَسَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ يَقُولُ: فَعَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْتَ هَذَا الْحَدِيثِ فِي حُرِّ بْنِ سُهَيْلٍ السُّلَمِيِّ , وَكَانَ عَلَى الْأَعَاجِمِ فِي ذَلِكَ الزَّمَانِ , فَكَانَ إِذَا رَاحُوا إِلَى مَسْجِدٍ نَظَرُوا إِلَيْهِ وَإِلَيْهِمْ قِيَامًا حَوْلَهُ فَعَجِبُوا لِنَعْتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ وَفِيهِمْ.

قَالَ أَبُو عَلْقَمَةَ: أَقْسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ ثَلَاثَ مَرَّاتٍ لَا نَعْلَمُ أَنَّهُ أَقْسَمَ فِي حَدِيثٍ مِثْلَهُ


18609. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது (சரியான) ஆடை இல்லாமல் இருப்பதையும்; வறுமையையும்; குறைந்த பொருள்களே இருப்பதையும் முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சந்தோஷமடையுங்கள். உங்களுக்கு குறைந்த பொருள் இருப்பதைவிட அதிக பொருள் இருப்பதையே நான் அதிகம் பயப்படுகிறேன். பாரசீகம் (ஈராக்), ரோம் (ஷாம்), ஹிம்யர் (யமன்) போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் வரை இந்த நிலையே உங்களிடம் இருக்கும்.

விரைவில் நீங்கள் மூன்று படையினராக மாறுவீர்கள். ஷாமில் ஒரு படையினராக இருப்பீர்கள். ஈராக்கில் ஒரு படையினராக இருப்பீர்கள். யமனில் ஒரு படையினராக இருப்பீர்கள்.

ஒரு மனிதருக்கு 100 பொற்காசுகள் கொடுத்தாலும் அவர் திருப்தி அடையாமல் கோபப்படும் நிலையும் ஏற்படும்.

அப்போது, இப்னு ஹவாலா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ரோமர்களிடம் பெரும் படைகள் இருக்கும் போது (அல்லது பலதலைமுறைகளாக அவர்கள் ஆட்சிசெய்யும்போது) அவர்களை நாங்கள் எப்படி வெற்றி கொள்ள முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதை அல்லாஹ் உங்களால் வெற்றி கொள்ளச் செய்வான். அதற்கு உங்களை பிரதிநிதிகளாக-ஆதிக்கமுள்ளவர்களாக ஆக்குவான்.

(ரோமர்களிலும், மற்றவர்களிலும்) வெண்மை ஆடை அணிந்த; பிடரிகளை மழித்த கூட்டத்தினர், உங்களில் உள்ள தலை மழித்த; கறுத்த இளைஞர்களின் தலைமையில் (அணிவகுத்து) நிற்கும் நிலை ஏற்படும். இளைஞர்கள் கட்டளையிட்டதை அவர்கள் செய்துமுடிப்பார்கள்.

அவர்களில் (ரோமர்கள், மற்றும்) வேறுசிலரின் பார்வையில், நீங்கள் ஒட்டகங்களில் இருக்கும் உண்ணி பூச்சிகளைவிட அற்பமானவர்களாவே கருதப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாமிய படைகளை) நான் அடைந்தால் நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்து கூறுங்கள் என்று கூறினார். அதற்கு, “ஷாம் நாட்டை உனக்கு தேர்வு செய்கிறேன். அதுவே அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்ததாகும். அவனுடைய அடியார்களில் தேர்வுசெய்யப்பட்டோர் அதன் பக்கம் சேர்க்கப்படுவார்கள். யமன்வாசிகளே! ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்தது ஷாம் ஆகும். முடியாதவர் யமனிலே தங்கி தன் பணியை செய்யட்டும். திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஅல்கமா அவர்கள் (ரஹ்) கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன்:

நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தன்மைகளை ஜுஸ்உ பின் ஸுஹைல் அஸ்ஸுலமிய்யி என்பவரின் விசயத்தில் நபித்தோழர்கள் கண்டார்கள். அவர் அந்தக் காலத்தில் அரபியல்லாதவர்களுக்கு தலைவராக இருந்தார். பள்ளிவாசலுக்கு சென்றால் அவரை அரபியல்லாத மக்கள் சுற்றிநிற்பதை கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இவர் விசயத்திலும், இவர்களின் விசயத்திலும் பொருந்திப்போவதைக் கண்டு நபித்தோழர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

மேலும் அபூஅல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தச் செய்தியை கூறும்போது 3 தடவை சத்தியமிட்டுக் கூறினார்கள். இதுபோன்று வேறு செய்தியை கூறும்போது இவ்வாறு சத்தியமிட்டுக் கூறியதாக நாம் அறியவில்லை.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

“உங்களால் ஷாம் வெற்றி கொள்ளப்படும்; பாரசீகம் மற்றும் ரோம் நாட்டின் பொக்கிஷங்கள் உங்களுக்கிடையே பங்கிடப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அறிவிக்கும் செய்தி இந்த நூலில் முன்னால் கூறப்பட்டுள்ளது.