🔗

பைஹகீ-குப்ரா: 18865

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ: مَا هَذِهِ؟ قَالُوا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرُوزِ , قَالَ: فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ.

قَالَ أَبُو أُسَامَةَ: كَرِهَ أَنْ يَقُولَ نَيْرُوزَ.


18865. முஹம்மத் பின் ஸிரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம் நைரூஸ் (எனும் பாரசீகப் புத்தாண்டு தினத்தின்) பரிசுகள் கொண்டுவரப்பட்டன. அதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “இது நைரூஸ் தினம்” என்று பதிலளித்தனர். அதைக் கேட்ட அலீ (ரலி) அவர்கள், “அப்படியானால் ஒவ்வொரு நாளும் நைரூஸாக இருக்கட்டும்” என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நைரூஸ் என்று சொல்வதை அலீ (ரலி) அவர்கள் வெறுத்ததால் தான் இவ்வாறு கூறினார்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

ஒரு குறிப்பிட்ட நாளை (நைரூஸ் என்று) சிறப்பித்தலுக்கு இஸ்லாம் அனுமதிக்காததால், அதைக் குறிப்பிடுவதில் அலீ (ரலி) அவர்கள் வெறுப்புத் தெரிவித்தார்கள் என்று தெரிகிறது.