🔗

பைஹகீ-குப்ரா: 19237

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ , وَالْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ “.


19237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குர்பானியில்) மாடு ஏழு பேருக்கும், ஒட்டகம் ஏழு பேருக்கும் ஈடாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


பைஹகீ இமாம் கூறுகிறார்:

அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியில், ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும் என்றே உள்ளது. மேலும், அபுஸ்ஸுபைர் (ரஹ்) —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் இந்த பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டு அறிவித்துள்ளனர்.

எனவே, “ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற அதாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு, “ஒட்டகம் பத்து பேருக்கு ஈடாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) வழியாக ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்தியை விட மேலானது (ஏற்றுக் கொள்ளத்தக்கது).

மேலும் அலீ (ரலி), ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாக, “மாடு ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற கருத்து நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.