” الضَّحَايَا إِلَى آخِرِ الشَّهْرِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِيَ ذَلِكَ “. لَفْظُ حَدِيثِ الْأَصْبَهَانِيِّ
وَفِي رِوَايَةِ أَبِي حَامِدٍ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الضَّحَايَا إِلَى هِلَالِ الْمُحَرَّمِ لِمَنْ أَرَادَ أَنْ يَسْتَأْنِي ذَلِكَ ”
رَوَاهُ أَبُو دَاوُدَ فِي الْمَرَاسِيلِ عَنْ مُوسَى بْنِ إِسْمَاعِيلَ عَنْ أَبَانَ
19256. அபூஸலமா (ரஹ்), ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூறியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது:
குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் துல்ஹஜ் மாதத்தின் இறுதி வரை கொடுக்கலாம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது அபூநுஐம் அஸ்பஹானீ அவர்களின் வார்த்தை அமைப்பாகும்.
அபூஹாமித் அவர்களின் அறிவிப்பில், “குர்பானி கொடுப்பதை தாமதப்படுத்த விரும்புகிறவர் முஹர்ரம் பிறை தெரியும் வரை கொடுக்கலாம்” என்று இடம்பெற்றுள்ளது.
இதை அபூதாவூத் அவர்கள் தனது ‘அல்மராஸீல்’ எனும் நூலில் முஸா பின் இஸ்மாயீல் —> அபான் என்ற அறிவிப்பாளர்தொடரில் பதிவு செய்துள்ளார்.