🔗

பைஹகீ-குப்ரா: 19741

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا يَرْتَمِيَانِ , فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ , فَقَالَ لَهُ صَاحِبُهُ: أَجَلَسْتَ؟ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ، فَهُوَ سَهْوٌ وَلَهْوٌ، إِلَّا أَرْبَعًا: مَشْيَ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ وَتَأْدِيبَهُ فَرَسَهُ، وَتَعَلُّمَهُ السِّبَاحَةَ، وَمُلَاعَبَتَهُ أَهْلَهُ “،


19741.

அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், என்ன நீங்கள் உட்கார்ந்து விட்டீர்கள்?. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கூறிவிட்டு அவர் சொன்னதாவது:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . ஒருவர் (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . நீச்சல் அடிக்க கற்றுக் கொள்வது.
4 . தனது மனைவியோடு விளையாடுவது.