كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ ثُمَّ يَنْظُرُ إِلَى الْفَجْرِ فَإِذَا رَآهُ تَمَطَّى ثُمَّ قَالَ: ” اللهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ ” قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللهُ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً هَذِهِ الْكَلِمَاتِ “
பாடம்:
மனாராவில் (உயரமான இடத்தில் நின்று) பாங்கு சொல்லுதல்.
1995. பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:
பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!