دَخَلْتُ مَعَ عَبْدِ اللهِ عَلَى أَخِيهِ عُتْبَةَ نَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَرَأَى مَعَ أَخِيهِ مِرْوَحَةً يَسْجُدُ عَلَيْهَا، فَانْتَزَعَهَا مِنْهُ عَبْدُ اللهِ، وَقَالَ: اسْجُدْ عَلَى الْأَرْضِ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ
3673. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுடன், நோயாளியாக இருந்த அவரின் சகோதரர் உத்பா (ரலி) அவர்களை நலம் விசாரிக்க சென்றேன். அப்போது அவர் ஒரு பலகை போன்றதின் மீது ஸஜ்தா செய்து தொழுதுக் கொண்டிருந்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) பார்த்தார்கள்.
உடனே அவர்கள், அதை அவரிடமிருந்து எடுத்து விட்டு உன்னால் முடிந்தால் முகத்தை தரையில் வைத்து தொழு! அது முடியாவிட்டால் ருகூஉ ஸஜ்தாக்களை சைகை செய்து தொழுதுக் கொள்! ருகூஉல் குனிவதை விட ஸஜ்தாவில் சற்று கூடுதலாக குனிந்து நிறைவேற்று! என்று கூறினார்கள்.