🔗

பைஹகீ-குப்ரா: 6270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

يُكَبِّرُ يَوْمَ الصَّدْرِ، وَيَأْمُرُ مَنْ حَوْلِهِ أَنْ يُكَبِّرُوا، فَلَا أَدْرِي تَأَوَّلَ قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ {وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ} [البقرة: 203] أَوْ قَوْلَهَ {فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ} [البقرة: 200]


6270. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (ஹஜ்ஜின் முடிவில்) “யவ்முஸ் ஸத்ர்” (எனும் துல்ஹஜ் 13 ஆம்) நாளில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறுவதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் அவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தக்பீர் சொல்லும்படி கட்டளையிடுவார்கள்.

ஆனால் அவர்கள் இதை, “குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்!” (அல்குர்ஆன்: 2: 203) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? அல்லது “உங்கள் ஹஜ்ஜின் காரியங்களை நிறைவேற்றிய பின்…”(அல்குர்ஆன்: 2:200) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)