🔗

பைஹகீ-குப்ரா: 6572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ مَوْتِ الْفُجَاءَةِ، أَيُكْرَهُ؟. قَالَتْ: لِأِيِّ شَيْءٍ يُكْرَهُ؟ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: ” رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذُ أَسَفٍ لِلْفَاجِرِ


6572. அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் ஏற்படுவதை வெறுக்க வேண்டுமா? என நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், என்ன காரணத்திற்காக அதை வெறுக்க வேண்டும்?.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இதைப்பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.