🔗

பைஹகீ-குப்ரா: 6655

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ غَسَّلَ مُسْلِمًا فَكَتَمَ عَلَيْهِ غَفَرَ اللهُ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ حَفَرَ لَهُ فَأَجَنَّهُ أَجْرَى عَلَيْهِ كَأَجْرِ مَسْكَنٍ أَسْكَنَهُ إِيَّاهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ كَفَّنَهُ كَسَاهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سُنْدُسِ وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ


6655. ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான்;

அவரை அடக்கம் செய்ய (கப்ர்) குழி தோண்டி அதில் அடக்கம் செய்தால் அவர் மறுமை நாளில் எழுப்பப்படும் வரை அவருக்காக தங்குமிடத்தை ஏற்படுத்தியவருக்கு கிடைப்பதைப் போன்ற கூலியை அவர் கொடுக்கப்படுவார்;

இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு (ரலி)