🔗

பைஹகீ-குப்ரா: 6947

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانُوا يُكَبِّرُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَسِتًّا ” , أَوْ قَالَ: ” أَرْبَعًا “، فَجَمَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَ كُلُّ رَجُلٍ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ


6947. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, ஆறு-அல்லது நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…

அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)