قِيلَ: يَا رَسُولَ اللهِ أِيُّ الصَّوْمِ أَفْضَلُ؟ قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ ” قَالَ: فَأِيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ
8517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)