أُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ فَقَالَ لَهُ: «سَمِّ اللهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ»
10039. வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் (அவர்களின் வளர்ப்பு மகன்) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அவருக்கு, நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்’ என்று கூறினார்கள்.