🔗

குப்ரா-நஸாயி: 10220

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، فَسَمِعْتُهُ اسْتَغْفَرَ مِائَةَ مَرَّةٍ يَقُولُ: «اللهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ»


10220. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் 100 முறை (பின்வருமாறு) பாவமன்னிப்புக் கோருவதை செவியுற்றேன்.

“அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வ துப் அலய்ய இன்னக்க அன்தத் தவ்வாபுல் ஃகஃபூர்.”

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னித்து விடு. எனக்கு கருணை புரிவாயாக. என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே மிக அதிகமாக தவ்பாவை ஏற்பவனும், மன்னிப்பவனுமாக இருக்கிறாய்).