🔗

குப்ரா-நஸாயி: 1064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَا لِي أَرَاكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ السُّوَرِ؟ قَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِطُولَى الطُّولَيَيْنِ

قُلْتُ: يَا أَبَا عَبْدِ اللهِ، مَا طُولَى الطُّولَيَيْنِ قَالَ: «الْأَعْرَافُ»


1064. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் (உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) அபூ அப்தில்லாஹ் அவர்களே! அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று பதிலளித்தார்.