🔗

குப்ரா-நஸாயி: 10646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، فَمَا أَسْأَلُ اللهَ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


10646. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துக் கொண்டால் அதில் அல்லாஹ்விடம் என்ன கேட்க வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)