رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ يَرْمِيَانِ، فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ فَقَالَ الْآخَرُ: «كَسِلْتَ؟» سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ فَهُوَ لَغْوٌ وَلَهْوٌ إِلَّا أَرْبَعَةَ خِصَالٍ: مَشْيٌ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَتَعْلِيمُ السَّبَّاحَةِ “
8891. அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், நீங்கள் கலைப்படைந்து விட்டீர்களா? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்:
அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:
1 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . தனது மனைவியோடு விளையாடுவது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.