«أَلَا أُخْبِرُكُمْ بِنِسَائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ، الْوَلُودُ، الْعَؤُودُ عَلَى زَوْجِهَا، الَّتِي إِذَا آذَتْ أَوْ أُوذِيَتْ، جَاءَتْ حَتَّى تَأْخُذَ بَيْدَ زَوْجِهَا، ثُمَّ تَقُولُ وَاللهِ لَا أَذُوقُ غُمْضًا حَتَّى تَرْضَى»
9094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்கள் மனைவியரில்) சொர்க்கவாசிகளான பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கவா? (அவர்கள் யாரெனில்:)
அவர்கள், தன் கணவனை அதிகம் விரும்புவோராகவும்; அதிகம் குழந்தையைப் பெற்றெடுப்போராகவும்; அனைத்து நிலையிலும் தன் கணவனின் விருப்பத்தைச் சார்ந்தும் இருப்பார்கள்.
(எந்தளவுக்கெனில்) தனது கணவனுக்கு ஏதேனும் தொல்லையை அவர்கள் ஏற்படுத்திவிட்டால் அல்லது (தனது கணவனால் அவர்களுக்கு) தொல்லை ஏற்பட்டுவிட்டால் தன் கணவரிடம் வந்து, அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் என்னை பொருந்திக் கொள்ளும் வரை நான் தூங்கமாட்டேன்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)