🔗

குப்ரா-நஸாயி: 9837

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ قَالَ: بِاسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، فَيُقَالُ لَهُ: حَسْبُكَ، هُدِيتَ وَوُقِيتَ وَكُفِيتَ


9837. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “இதுவே உனக்கு போதும்! நீ நேர்வழிகாட்டப்பட்டாய்! பாதுகாக்கப்பட்டாய்! பொறுப்பேற்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)