🔗

musannaf-abdur-razzaq-21453: 21453

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

أَنَّ ابْنَ عَبَّاسٍ أَتَاهُ الأَعْرَابُ فَقَالُوا: إِنَّا نُقِيمُ الصَّلاَةَ، وَنُؤتِي الزَّكَاةَ، وَنَحُجُّ الْبَيْتَ، وَنَصُومُ رَمَضَانَ، وَإِنَّ نَاسًا مِنَ المُهَاجِرِينَ يَقُولُونَ: لَسْنَا عَلَى شَيْءٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَنْ أَقَامَ الصَّلاَةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ، دَخَلَ الْجَنَّةَ.


21453. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சில கிராமவாசிகள் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நாங்கள் தொழுகின்றோம்; ஸகாத் வழங்குகின்றோம்; ஹஜ் செய்கின்றோம்; ரமலான் மாதம் நோன்பு வைக்கின்றோம். ஆனால் முஹாஜிர் நபித்தோழர்களில் சிலர் எங்களைப் பார்த்து, “நீங்கள் எதிலும் இல்லை” என்று கூறுகின்றனர் என முறையிட்டனர்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அய்ஸார் பின் ஹுரைஸ் (ரஹ்)