أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ رَأَى رَجُلاً قَدْ حَلَقَ قَفَاهُ، وَلَبِسَ حَرِيرًا، فَقَالَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.
21911. பிடரியை மழித்தும், பட்டாடையும் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கத்தாதா (ரஹ்)