بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِيَّاكُمْ وَالْفُرَجَ» يَعْنِي فِي الصَّفِّ
قَالَ عَطَاءٌ: «وَقَدْ بَلَغَنَا أَنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ فُرْجَةً دَخَلَ فِيهَا»
2474. (கூட்டுத் தொழுகையில் ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
தொழுகை வரிசையில் இடைவெளியை கண்டால் அதில் ஷைத்தான் நுழைந்து விடுவான் என்று செய்தியும் நமக்கு கிடைத்தது என்று அதாஉ (ரஹ்) கூறினார்.