🔗

musannaf-abdur-razzaq-2560: 2560

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ وَصَلَّى مَعَهُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ اجْعَلْكَ أَحَبَّ شَيْءٍ إِلَيَّ وَأَحْسَنَ شَيْءٍ عِنْدِي»


2560. அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார். அவருக்கு அருகில் நின்று தொழுதார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா; வல்ஹம்து லில்லாஹி கஸீரா; வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா; அல்லாஹும்மஜ்அல்க அஹப்ப ஷைஇன் இலைக; வ அஹ்ஸன ஷைஇன் இன்தீ ”

(பொருள்; அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்; அல்லாஹ்வே! எல்லாவற்றையும் விட உன்னையே எனக்கு பிரியமானதாக ஆக்கு; என்னிடத்தில் அழகானதாக ஆக்கு) என்று கூறினார்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)