🔗

musannaf-abdur-razzaq-3748: 3748

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

” إِنَّ الصَّلَاةَ ثَلَاثَةُ أَثْلَاثٍ: ثُلْثٌ طَهُورٌ، وَثُلْثٌ رُكُوعٌ، وَثُلْثٌ سُجُودٌ، فَمَنْ حَافَظَ عَلَيْهِنَّ قُبِلْنَ مِنْهُ، وَمَنْ نَقَصَ فَإِنَّمَا يَنْقُصُ مِنْ نَفْسِهِ “


3748. தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் அவற்றைப் பேணிப் பாதுகாத்து தொழுகிறாரோ, அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். யார் அதில் குறை வைக்கிறாரோ, அவர் தனக்குத்தான் குறை வைத்துக் கொள்கிறார் என்று கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)