🔗

musannaf-abdur-razzaq-5273: 5273

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

جَاءَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «إِذَا صَلَّيْتُنَّ مَعَ الْإِمَامِ يَوْمَ الْجُمُعَةِ فَصَلِّينَ رَكْعَتَيْنِ، وَإِذَا صَلَّيْتُنَّ فِي بُيُوتِكُنَّ فَصَلِّينَ أَرْبَعًا»

قَالَ سُفْيَانُ: وَالْعَبْدُ بِتِلْكَ الْمَنْزِلَةِ،


பாடம்:

பெண்கள் ஜுமுஆவிற்கு வந்தால் எத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும்?

5273. பனூ ஃபஸாரா கிளையைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், (ஒரு சமயம்) வெள்ளிக்கிழமை எங்களிடம் வந்து, “நீங்கள் வெள்ளிக்கிழமை இமாமுடன் தொழும் போது இரண்டு ரக்அத் தொழுங்கள்; உங்கள் வீட்டில் தொழுதால் (லுஹராக) நான்கு ரக்அத் தொழுங்கள் என்று கூறினார்கள்.