كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فِي رَمَضَانَ، فَجِيءَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ قَالَ: «ادْنُ» قَالَ: إِنِّي صَائِمٌ، وَمَا هُوَ إِلَّا صَوْمٌ كُنْتُ أَصُومُهُ، فَقَالَ: «أَمَّا أَنْتَ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ؟ فَاطْعَمَ»
7318. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார்:
ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் விலகிச் சென்றார். அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், அவரிடம் பக்கத்தில் வரக் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் நான் எப்போதும் வைக்கும் நோன்பை வைத்துள்ளேன் என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் இதை சாப்பிடு! என்று கூறினார்கள்.