حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَيْنِ قَالَ: «إِنَّ اللَّهَ مُحْسِنٌ يُحِبُّ الْإِحْسَانَ إِلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ»
8603. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இரண்டு விஷயங்களை மனனமிட்டுள்ளேன்.
(அவற்றில் ஒன்று) அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் ‘முஹ்ஸின்’ நல்லமுறையில் நடந்துக் கொள்பவன்). அவன் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லமுறையில் நடந்துக் கொள்வதை விரும்புகிறான். எனவே, நீங்கள் (தண்டனைக்காக) கொலை செய்தால், அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் (பிராணிகளை) அறுத்தால், அழகிய முறையில் அறுங்கள்.
மற்றொன்று: உங்களில் ஒருவர் தமது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளட்டும். மேலும், அவர் அறுக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!