«شُرْبُ زَمْزَمَ بِأَخْذِ الدَّلْوِ، ثُمَّ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ، فَيَشْرَبُ مِنْهَا حَتَّى يَتَضَلَّعَ، فَإِنَّهُ لَا يَتَضَلَّعُ مِنْهَا مُنَافِقٌ»
9110. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸம்ஸம் நீரை குடிக்கும் முறை (என்னவெனில் ஸம்ஸம் நீருள்ள) வாளியை எடுத்து பிறகு கிப்லாவை முன்னோக்கி வயிறு நிரம்ப குடிப்பதாகும். ஏனெனில் நயவஞ்சகர்கள் வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)