🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12806

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَنْ طَافَ بِالْبَيْتِ لَمْ يَرْفَعْ قَدَمًا ، وَلَمْ يَضَعْ أُخْرَى ، إِلاَّ كُتِبَتْ لَهُ بَهَا حَسَنَةٌ ، وَحُطَّتْ عَنْهُ بَهَا خَطِيئَةٌ ، وَرُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ.

وَسَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَحْصَى سُبُوعًا كَانَ كَعَدْلِ رَقَبَةٍ.


பாடம்:

கஅபாவை சுற்றிவருவதின் நன்மை.

12806. கஅபாவை சுற்றிவருபவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு நன்மை எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) ஒரு தீமை அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படும்.

(மேலும்) இந்த கஅபாவை ஏழு முறை கணக்கிட்டு சுற்றிவருபவர் ஒரு அடிமையை உரிமைவிட்டவர் போன்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)