أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ، وَالْمِهْرَجَانِ، فَكَانَ يَقُولُ لِأَهْلِهِ: «مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ»
24372. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.
அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் உண்ணுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)