🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26622

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى، قَسَّمَ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ بَيْنَ أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ»، فَكَانَ الرَّجُلُ يَذْهَبُ بِالرَّجُلِ، وَالرَّجُلُ بِالرَّجُلَيْنِ، وَالرَّجُلُ بِالثَّلَاثَةِ حَتَّى ذَكَرَ عَشَرَةً، قَالَ: فَكَانَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَرْجِعُ إِلَى أَهْلِهِ بِثَمَانِينَ يُعَشِّيهِمْ


26622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலைநேரம் ஆனதும் திண்ணை (நபி)த்தோழர்களான சிலரை மற்ற நபித்தோழர்களிடம் பிரித்துக் கொடுப்பார்கள். எனவே அவர்களில் ஒருவர் தன்னுடன் ஒருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் இருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் மூவரை அழைத்துச் செல்வார். (இவ்வாறு ஒருவர் பத்து பேரைக் கூட அழைத்துச் செல்வார்) என்று கூறிவிட்டு இவர்களில் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் தன்னுடன் என்பது பேரை அழைத்துச் செல்வார் என்று இப்னு ஸீரீன் (ரஹ்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்)