🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3289

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

«إِنَّ أَوَّلَ وَقْتِ الظُّهْرِ أَنْ تَنْظُرَ إِلَى قَدَمَيْكَ فَتَقِيسَ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَإِنَّ أَوَّلَ الْوَقْتِ الْآخَرِ خَمْسَةُ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ، أَظُنُّهُ قَالَ، فِي الشِّتَاءِ»


பாடம்:

லுஹர் தொழுகையின் நேரத்தை பாதத்தால் எவ்வாறு அளந்து கணக்கிடுவது?

3289.  அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம், நிழலை உன் பாதத்தின் மூன்று மடங்கிலிருந்து ஜந்து மடங்குவரை கணக்கிட்டுக் கொள்வதாகும். குளிர் காலத்தில் ஆரம்ப நேரம், ஜந்து மடங்கிலிருந்து ஏழு மடங்குவரை கணக்கிட்டுக் கொள்வதாகும்.

அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)