أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “
34319. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:
ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!
1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.