🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34936

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

{اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ} [التوبة: 31] قَالَ: أَطَاعُوهُمْ فِيمَا أَمَرُوهُمْ بِهِ مِنْ تَحْرِيمِ حَلَالٍ وَتَحْلِيلِ حَرَامٍ , فَعَبَدُوهُمْ بِذَلِكَ


34936. (தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31)

எனும் வசனத்தின் விளக்கம்பற்றி, “யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்கள், (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை தடைசெய்தபோதும்; (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை அனுமதித்தபோதும் அவர்களுக்கு கட்டுப்பட்டனர். எனவே இது அவர்களை வணங்கியதாக ஆனது என்று அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் ஸாயிப் (ரஹ்)