🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3770

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

صَلَّيْتُ صَلَاةً وَإِلَى جَنْبِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ قَالَ: فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ. قَالَ: فَقُلْتُ لَهُ: يَا أَبَا الْوَلِيدِ، أَلَمْ أَسْمَعْكَ تَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ؟ قَالَ: «أَجَلْ؛ إِنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِهَا»


3770. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொழும்போது என்னருகில் இருந்த, உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை சத்தமாக) ஓதினார்கள்.

(தொழத பின்பு) நான், அபுல் வலீத் (உபாதா பின் ஸாமித்-ரலி) அவர்களே! நீங்கள் திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை சத்தமாக) ஓதியதை நான் செவியுற்றேனே! என்ன இது? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம்!. இதை ஓதாமல் தொழுகைக் கூடாது என்று பதிலளித்தார்கள்.