🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 5464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَسُئِلَ عَنْ السَّاعَةِ الَّتِي فِي الْجُمُعَةِ، فَقُلْتُ: هِيَ السَّاعَةُ الَّتِي اخْتَارَ اللَّهُ لَهَا أَوْ فِيهَا الصَّلَاةَ، قَالَ: «فَمَسَحَ رَأْسِي، وَبَارَكَ عَلَيَّ، وَأَعْجَبَهُ مَا قُلْتُ»


5464. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது நான், “அதை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அல்லது அதில் தொழுவதை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று கூறினேன்.

உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்து எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்; எனக்கு இறைவனின் அருள்வளம் கிடைக்க பிரார்த்தனை செய்தார்கள்.