🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 7940

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

دَخَلَ بَعْضُ بَنِي أَخِي عَائِشَةَ إِلَيْهَا، فَقَامَ إِلَى الْمَسْجِدِ، فَقَالَتْ لَهُ: اجْلِسْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ طَعَامٍ، وَلَا هُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ»


7940. ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் மகன்களில் ஒருவர் அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தார். (அப்போது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது). உடனே அவர் எழுந்து பள்ளிவாசலுக்கு செல்ல தயாரானார்.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)