🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9502

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «تَعَالَ فَكُلْ» قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «إِنْ كُنْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَتَعَالَ فَكُلْ»


9502. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ இருக்காதோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வேறு சிலரும் இருக்கும் போது அவர்களுக்கு முன் பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது.  அனைவரும் அதை சாப்பிடுவதற்கு ஒன்று கூடினர். ஒரு மனிதர் மட்டும் அவர்களை விட்டு விலகினார். அம்மார் (ரலி) அவர்கள், அவரிடம், வந்து சாப்பிடுங்கள்! என்று கூறினார்கள். அவர் நான் நோன்பாளி என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் வந்து சாப்பிடு! என்று கூறினார்கள்.