سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ الْوِتْرِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ»، وَسَأَلْتُ ابْنَ عُمَرَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ»
1373. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(வித்ர்) இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத்தாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று விடையளித்தார்கள். அவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களிடமும் வினவினேன். அவர்களும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரவின் இறுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத் ஆகும்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று விடையளித்தார்கள்.
Book : 6