🔗

முஸ்லிம்: 1377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا رَأَيْتَ أَنَّ الصُّبْحَ يُدْرِكُكَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ». فَقِيلَ لِابْنِ عُمَرَ: مَا مَثْنَى مَثْنَى؟ قَالَ: «أَنْ تُسَلِّمَ فِي كُلِّ رَكْعَتَيْنِ»


1377. உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்; நீங்கள் சுப்ஹு நேரத்தை அடைந்துவிட்டதாகக் கண்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழுது கொள்ளுங்கள்!” என்று சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இரண்டிரண்டு ரக்அத்கள் என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் சலாம் கொடுப்பதாகும்” என்று விளக்கமளித்தார்கள்.

Book : 6