🔗

முஸ்லிம்: 1579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ: {وَنَادَوْا يَا مَالِكُ} [الزخرف: 77]


1579. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை மீது (உரையாற்றியபோது) “(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்” (மாலிக்கே!) என்று அழைப்பார்கள்” எனும் (43:77ஆவது) வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.

இதை ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 7