«مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ قِيرَاطٌ، فَإِنْ تَبِعَهَا فَلَهُ قِيرَاطَانِ»، قِيلَ: وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: «أَصْغَرُهُمَا مِثْلُ أُحُدٍ»
1724. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்” (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு “கீராத்”கள் (நன்மை) உண்டு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு “கீராத்”கள் என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இரண்டு “கீராத்”களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்” என்று விடையளித்தார்கள்.
Book : 11