🔗

முஸ்லிம்: 1725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ، وَمَنِ اتَّبَعَهَا حَتَّى تُوضَعَ فِي الْقَبْرِ فَقِيرَاطَانِ» قَالَ: قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، وَمَا الْقِيرَاطُ؟ قَالَ: «مِثْلُ أُحُدٍ»


1725. அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு “கீராத்” (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு “கீராத்”கள் (நன்மை) உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் “அபூஹுரைரா (ரலி) அவர்களே! “கீராத்” என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உஹுத் மலை அளவு” என்று விடையளித்தார்கள்.

Book : 11