أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الْوِصَالِ، قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى»
பாடம் : 11
தொடர்நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2010. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்கலாகாது எனத் தடைவிதித்தார்கள். “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்கள்.
Book : 13