إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ، وَهُوَ صَائِمٌ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ
பாடம் : 28
நோன்பு நோற்றிருப்பவர் விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று அவர் சொல்லிவிட வேண்டும்.
2114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று அவர் கூறிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 13