🔗

முஸ்லிம்: 2505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«رَحِمَ اللهُ الْمُحَلِّقِينَ» قَالُوا: وَالْمُقَصِّرِينَ؟ يَا رَسُولَ اللهِ، قَالَ: «رَحِمَ اللهُ الْمُحَلِّقِينَ» قَالُوا: وَالْمُقَصِّرِينَ؟ يَا رَسُولَ اللهِ، قَالَ: «رَحِمَ اللهُ الْمُحَلِّقِينَ» قَالُوا: وَالْمُقَصِّرِينَ؟ يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَالْمُقَصِّرِينَ»


2505. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று பிரார்த்தித்ததும் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மறுபடியும்) “அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள்புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (திரும்பவும்) “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்வர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)” எனப் பிரார்த்தித்தார்கள்.

Book : 15