🔗

முஸ்லிம்: 2748

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا، أَوْ أَنْ تَسْأَلَ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي صَحْفَتِهَا، فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ رَازِقُهَا»


2748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணமுடிப்பதற்கும், (ஒரு பெண்) தன் (இஸ்லாமிய) சகோதரியின் (வாழ்க்கைப்) பாத்திரத்தைக் கவிழ்த்து (அதைத் தனதாக்கி)விடுவதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப்போகின்றவரிடம்) கோருவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஏனெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இவளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் ஆவான்.

Book : 16