🔗

முஸ்லிம்: 2791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

رَآنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيَّ بَشَاشَةُ الْعُرْسِ، فَقُلْتُ: تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «كَمْ أَصْدَقْتَهَا؟» فَقُلْتُ: نَوَاةً، وَفِي حَدِيثِ إِسْحَاقَ: مِنْ ذَهَبٍ


2791. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் திருமணத்தின் மகிழ்ச்சி (ரேகை)யைக் கண்டார்கள். அப்போது நான், “ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்” என்றேன். அவர்கள், “அவளுக்கு எவ்வளவு மஹ்ர் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “ஒரு பேரீச்சங்கொட்டை (எடையளவு)” என்றேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஒரு பேரீச்சங்கொட்டை(யின் எடையளவு) தங்கத்தை” என இடம்பெற்றுள்ளது.

Book : 16