اسْتَأْذَنَ عَلَيَّ عَمِّي مِنَ الرَّضَاعَةِ أَبُو الْجَعْدِ، فَرَدَدْتُهُ – قَالَ لِي هِشَامٌ: إِنَّمَا هُوَ أَبُو الْقُعَيْسِ – فَلَمَّا جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْتُهُ بِذَلِكَ، قَالَ: «فَهَلَّا أَذِنْتِ لَهُ تَرِبَتْ يَمِينُكِ» أَوْ «يَدُكِ»
2860. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல்ஜஅத் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்ததும் இது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.
– ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் “அபுல்குஐஸ்தான் அவர் (அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) ஆவார்” என்று கூறினார்கள்.-
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது வலக் கை, அல்லது உனது கை மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 17