إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيَّ مَسْرُورًا، تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ، فَقَالَ: ” أَلَمْ تَرَيْ أَنَّ مُجَزِّزًا نَظَرَ آنِفًا إِلَى زَيْدِ بْنِ حَارِثَةَ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، فَقَالَ: إِنَّ بَعْضَ هَذِهِ الْأَقْدَامِ لَمِنْ بَعْضٍ
பாடம் : 11
அங்க அடையாளங்களை வைத்து உறவு முறையைக் கண்டறியும் நிபுணர், ஒரு குழந்தை யாருக்குரியதென்று தீர்மானிக்கிறாரோ அதன்படி செயல்படுதல்.
2890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நெற்றிக்கோடுகள் ஒளிர்ந்த வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது “உனக்குத் தெரியுமா? சற்று முன் (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ் என்பார், ஸைத் பின் ஹாரிஸாவையும் (அவருடைய புதல்வர்) உசாமா பின் ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது) அவர்களின் பாதங்களைப் பார்த்தார். மேலும், “இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது”என்று சொன்னார்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 17